கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரசாரத்தை தொடங்கி பரபரப்பாக அடுத்தடுத்த கட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அவர் சென்னை மின்ட் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் ஐசியூவில் இருக்கிறது அதைக் காப்பாற்றும் வைத்தியர்கள் நாங்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நாங்கள் செவிலியர்கள் நீங்கள் தான் வைத்தியர்கள் என்று கூறிய கமலஹாசன்.
திமுக தலைவர் ஸ்டாலினை தாக்கியும் பேசியுள்ளார். உங்களுக்கு வசனம் சொல்லித் தருவது என் கடமை நான் பேசும் வசனங்களை தான் மு க ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார். நாமே தீர்வு என்று நாங்கள் சொன்னால் ஒன்றிணைவோம் வா என்று சத்தம் வராமல் சொல்வார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று முதல் கட்சியாக நாங்கள்தான் அறிவித்தோம் அதை உல்டாவாக குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 ரூபா தருவேன் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
எங்களுடைய ஆட்சியில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறோம் என்று அறிவித்திருந்தோம் அதையே ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக ஸ்டாலின் அறிவிக்கிறார். எங்களுடைய ஏழு வாக்குறுதிகளை காப்பி அடித்துள்ளார் அப்படியாவது பாஸ் பண்ண வேண்டும் என்று அவசரம் வந்துவிட்டது ஸ்டாலினுக்கு என்று கூறியுள்ளார்.
எனது தந்தை காங்கிரஸில் இருந்தவர். அவர்கள் மீது மரியாதை உண்டு வெள்ளைக்காரர்களிடம் நாட்டை மீட்டு அந்த கட்சி சேர்ந்தவர்கள் கொள்ளைக்காரர்களுக்கு வாட்ச்மேனாக இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று கூறி உள்ளார் கமல்.
முன்பெல்லாம் தனது கட்சி மற்றும் தனது கொள்கையை மட்டும் பேசி வந்த கமல் திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக தாக்கி பேசுவது ஆச்சர்யமாக உள்ளது.