பத்மபிரியா யூடியூப் சேனல் மூலம் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். சமூக அக்கறையோடு மக்களுக்கு நிறைய விழிப்புணர்வுகளை தனது வீடியோ மூலம் தெரிவித்து வந்தார். அதன்பின் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட பத்மபிரியா நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ வேட்பாளராக மதுரவாயில் தொகுதியில் நின்றார்.
இளம் வயதில் ஒரு பெண்ணாக தைரியமாக அரசியலில் இறங்கி மதுரவாயில் தொகுதியில் உள்ள நிறை குறைகளை தெரிந்துகொண்டு வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார் பத்மப்ரியா. கூட்டமே இல்லாத இடத்தில் தனி ஆளாக நின்று கூட தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்துவந்தார் ஆனால் இவருடைய தேர்தல் பிரச்சார வீடியோக்கள் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வைரலானது.
மதுரவாயில் தொகுதியில் பத்மபிரியா ஜெயிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று சில ஊடகங்களும் தெரிவித்து வந்தது ஆனால் மதுரவாயில் தொகுதியில் திமுக அதிக வாக்கினைப் பெற்று வெற்றிபெற்றது இருந்தாலும் பத்மபிரியாவிற்கு 33 ஆயிரத்து 406 வாக்குகள் மக்கள் அளித்திருந்தார்கள்.
மூன்றாவது இடத்தில் சில கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய பத்மப்ரியா தேர்தலில் தோற்றாலும் மக்கள் மனதில் நிறைந்திருந்தார்.
இந்நிலையில் பத்மபிரியா கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன் அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என கருதி தெரிவித்துக் கொள்கிறேன் எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என்று அறிவித்துள்ளார்.
சிறப்பாக தேர்தல் நேரத்தில் செயல்பட்ட பத்மபிரியா விலகக் காரணம் என்ன ஏன் கமலஹாசன் கட்சியிலிருந்து அனைவரும் விளங்குகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.