ஆக்ராவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்று மதுரை பெண் சாதித்துள்ளார். ஆக்ராவில் ஸ்டார் லைவ் என்ற அமைப்பின் சார்பில் “மிஸ்டர் இந்தியா” மற்றும் “மிஸ் இந்தியா” 2020 -2021 ஆண்டிற்கான ஆணழகன், அழகி போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மிஸ் இந்தியா பிரிவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி தமிழ்நாடு என நாடு முழுவதும் உள்ள பெண்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகம் சார்பில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள புதுதாமரைபட்டினத்தை சேர்ந்த மாணிகா 22 உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பல்வேறு சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற மாணிகா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். மதுரை பெண் மாணிகாவுக்கு இதுதான் முதல் போட்டி என்பதால் “மிஸ் இந்தியா” பட்டத்தை வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அவருக்கு “மிஸ் தமிழ்நாடு” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த போட்டிக்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு பெண்கள் கலந்து கொண்டனர். அதிலும் இந்தியா பட்டத்தை தவிர மிஸ் தமிழ்நாடு, மிஸ் மகாராஷ்டிரா, மிஸ் கர்நாடகா ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
முதல் போட்டியிலேயே மதுரையை சேர்ந்த மாணிகா “மிஸ் தமிழ்நாடு” பட்டம் பெற்று அசத்தி உள்ளார். இவர் பிடெக் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். மேலும் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.