கொரோனாவின் இரண்டாவது அலை சற்று தொடர்ந்து வந்தாலும் மக்கள் மனதில் இன்னும் பயம் போகவில்லை. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் விமான பயணத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. சமீபத்தில் நடிகர் மாதவன் “அமெரிகி பண்டிட்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து துபாய்க்கு விமானத்தில் பயணித்துள்ளார்.
அப்போது பயணிகள் வேறு யாரும் இன்றி அவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார். நான் பயணித்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பதிவு செய்து இருந்தார்கள். ஆனால் விமானத்திற்குள் சென்ற பிறகுதான் நான் மட்டும் தனியாக பயணிக்க போவது தெரிந்தது.
எல்லோரும் அவரவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தங்கள் பயணத்தை ரத்து செய்தார்கள். கொரோனா பயம் இதற்கு காரணம் இந்த நிலை சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.