மாதவன் சமீபத்தில் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் தான் ராக்கெட்ரி இந்த திரைப்படம் இந்திய சயின்டிஸ்ட் நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த திரைப்படம்.
நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானிக்கு என்னென்ன எல்லாம் நடந்தது என்னென்ன சாதனை செய்தார் இவ்வளவு நாட்கள் நாம் அவரை கொண்டாட மறந்து விட்டோம் என்பதை மாதவன் படத்தின் மூலம் தெரியப்படுத்த இருப்பதாக கூறியிருந்தார்.
இந்தப் படத்திற்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் சூர்யா சில காட்சிகளில் நடித்து கொடுத்துள்ளாராம். நீங்கள் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் சிறிய கதாபாத்திரம் தான் என்று மாதவன் சூர்யாவிடம் சொன்ன உடனே சூர்யா இந்த படத்திற்கு நடிக்க எந்த ஒரு தொகையும் வாங்கவில்லையாம். சென்னையில் இருந்து மும்பை வந்த தனது குழுவுடன் வந்த சூர்யா அவருடைய செலவில் உடை மற்றும் மேக் அப் வரை பார்த்து கொண்டாராம் இதனை மாதவன் தெரிவித்து இருந்தார்சூர்யா முதல் முதலாக ராக்கெட்ரி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தவுடன் மாதவனை பார்த்து அசந்து போய் நின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் சூர்யா ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வருகிறார் அப்போது மாதவன் நம்பி நாராயணன் அவர்களின் தோற்றத்தில் மேக்கப் போட்டு அமர்ந்திருக்கிறார் மாதவனை பார்த்த சூர்யா ஆச்சு அசல் நம்பி நாராயணன் போல் இருக்கிறார் என்று ஆச்சரியத்துடன் பார்க்கிறார் அந்த நேரத்தில் விஞ்ஞானி நம்பினாராயணன் சூர்யாவிடம் உங்களுடைய நடிப்பு மற்றும் உங்கள் தந்தையின் நடிப்பு பிடிக்கும் என்று கூற சூர்யா அவரை வியந்து பார்த்தார்.
இதோ அந்த வீடியோ