Sunday, April 28, 2024
-- Advertisement--

களைகட்டும் மாநாடு பாக்ஸ் ஆபீஸ் மூன்றாவது நாள் வசூல்.. மாஸ் காட்டும் சிம்பு ரசிகர்கள்.. நிரம்பி வழியும் திரையரங்குகள்…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.டைம் லூப் திரைக்கதையில் அமைந்த கதையை அழகாக காட்சிப்படுத்தி விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு.

மாநாடு திரைப்படத்தில் ஹீரோவுக்கு நிகராக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் ரிலீஸ் ஆனதில் இருந்து ரசிகர்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர்.மாநாடு திரைப்படத்தில் தமிழகத்தில் முதல் இரண்டு நாட்களில் 14 கோடிகளை வசூலித்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இதிலிருந்து ஒரு நாள் வசூலாக ஏழு கோடி வசூலை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது நாளான சனிக்கிழமை அன்று எட்டு கோடிகள் பணம் வசூலித்ததாக சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார்.

இதிலிருந்து முதல் இரண்டு நாள் வசூலை தாண்டி மூன்றாவது நாள் வசூல் அதிகமாகி உள்ளது. முதல் மூன்று நாட்களில் தமிழக திரையரங்குகளில் 22 கோடிகள் வசூலித்த முதல் சிம்பு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அடை மழையிலும் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகி உள்ளது.

அதனால் வசூல் 7 கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. நான்காவது நாள் வசூல் இன்று இரவுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு திரைப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். திரை வாழ்க்கையில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்ற பெயரை நிச்சயம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles