சினேகன் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான கன்னிகா ரவியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சினேகன் நடிகர், பாடலாசிரியர், மக்கள் நீதி மைய மாநில இளைஞர் அணி செயலாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.
தமிழ் சினிமாவில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்கள் இன்றளவும் மக்களிடையே நீங்காமல் இடம் பிடித்துள்ளது. அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானார் கன்னிகா ரவி. சித்திரம் பேசுதடி, அடுத்த சாட்டை, சத்திரபதி, தேவராட்டம் என்ற படத்திலும் மற்றும் டிவி தொடர்களிலும் கன்னிகா ரவி நடித்துள்ளார்.
இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்ததை அறிந்த இருவீட்டு பெற்றோரும் அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்தனர். இதையடுத்து வரும் 29-ஆம் தேதி காலை 10:45 அளவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தலைமையில் சினேகன் கன்னிகா ரவி திருமணம் சீர்திருத்த முறைப்படி நடக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.