தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்பிபி. இவர் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவர் இந்தியாவில் தமிழில் மட்டுமல்லாது பிற மொழி படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இவருடைய பாடல் வரிகளாலும் பாடல்களாலும் அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவரை அறியாதவர்கள் எவரும் இல்லை. அந்த அளவிற்கு பேர் புகழையும் கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரோனாவால் கிருமித்தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு உடல்நிலை குணமாக வேண்டும் என்பதற்காக அனைத்து ரசிகர்களும் மட்டுமின்றி நடிகர்-நடிகைகள் அனைவரும் மக்கள் தங்கள் வீடுகளில் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல குடும்பத்தினர் எஸ்பிபிகாக மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்த செய்தி அறிக்கையில் அவர் உடல்நிலை மிக மோசமான நிலையில் சென்றுள்ளதாகவும் ,அவர் நுரையீரல் பகுதியில் அதிக ரத்த கசிவு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.