Saturday, May 4, 2024
-- Advertisement--

நயன்தாராவின் திருமணம் முடிந்துவிட்டதா…!!! நெற்றியில் பொட்டு விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு வந்த நயன்தாரா..!!! ரகசிய திருமணம் உண்மையா?

நயன்தாரா தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை அதுமட்டுமல்லாமல் கிட்டத்திட்ட தமிழ் திரையுலகில் இரண்டு ஆண்டுகளில் தாக்குப்பிடிக்க முடியாமல் போன நடிகைகள் மத்தியில் நயன்தாரா 17 வருடங்களாக தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

தற்பொழுது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் லயன் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா வாழ்வில் தொடர் காதல் தோல்விகளை சந்தித்து வந்தாலும் நானும் ரவுடி தான் என்ற படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது இருவரும் பல வருடங்களாக காதலர்களாகவே திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். நயன்தாரா வீட்டுக்கு விக்னேஷ் சிவன் செல்வதும் விக்னேஷ் சிவன் வீட்டிற்கு நயன்தாரா செல்வதும் வழக்கமாக வைத்திருந்தனர் அது மட்டுமல்லாமல் வெளிநாடுகள் சுற்றி வந்தனர்.

நயன்தாரா அவர்களின் தந்தை நீண்ட வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதால் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த நயன்தாரா கொரோனா கால கட்டத்தில் தனது நிச்சயதார்த்தத்தை சைலன்டாக குடும்பத்தினரை மட்டும் அழைத்து முடித்துக் கொண்டார்.

விரைவில் விக்னேஷ் சிவனும் நானும் திருமணம் செய்துகொள்வோம் எங்கள் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்போம் என்று நயன்தாரா கூறியிருந்தார்.

இன்று நயன்தாரா தனது வருங்கால கணவர் விக்னேஷ் அவர்களுடன் சென்னையில் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். அதே கோவிலுக்கு சென்னை மேயர் ப்ரியா ராஜன் அவர்களும் வந்திருந்தார் நயன்தாராவை சந்தித்த சென்னை மேயர் பிரியா அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் நயன்தாரா பிரியா அவர்களிடம் வாழ்த்து தெரிவித்து தற்போது ஏற்றுள்ள பதவியில் சிறந்து விளங்கி மற்றவர்களுக்கு ரோல் மாடலாக நீங்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வர நயன்தாரா நெற்றியில் உள்ள பொட்டு பலரை ஆச்சரியப்படுத்தியது காரணம் திருமணம் ஆனவர்கள் மட்டுமே நெற்றி பொட்டு வைப்பார்கள் நயன்தாரா எப்போதும் இல்லாமல் இந்த தடவை கோவிலுக்கு வரும் பொழுது நெற்றியில் பொட்டு வைத்துள்ளார் ஒருவேளை நயன்தாராவின் திருமணம் முடிந்து விட்டதோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதுபற்றி சினி வட்டாரத்தில் நெருக்கமானவர்கள் விசாரித்தபோது இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். எது உண்மை என்பது நயன் விக்கி சொன்னால் மட்டுமே தெரிய வரும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles