தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா. ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது நயன்தாரா காத்துவாக்குல இருந்த காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அவருடைய வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்குனர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்துமே பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது.
தற்போது படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் நயன்தாரா அப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிட்டார்கள் படக்குழுவினர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதீஜா என்ற கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
இதற்கிடையில் தனது.வருங்கால கணவர் விக்னேஷ் சிவனுடன் பல கோயில்களுக்கு சென்று சாமி வழிபாடு செய்து வருகிறார். நயன்தாரா அது மட்டுமல்லாமல் சில பூஜைகளிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் நயன்தாரா 37வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பிறந்தநாளை பெரிய கேட்கில் நயன் என்ற வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டிக் பிரமாண்டமாக கொண்டாடினர்.
நடிகை நயன்தாராவுக்கு கேரளாவில் சொந்த வீடும் தோட்டமும் இருக்கிறது. ஹைதராபாத் மற்றும் சென்னையில் சாலிகிராமம் எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் இருக்கிறது. தற்போது அவர் எழும்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு இந்த வீட்டில் நயன்தாரா குடியேற திட்டமிட்டுள்ளாராம்.