நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டராக தன்னை காட்டிக் கொண்டு போலீஸ் உடையில் இருந்த ஒரு பெண் ஒருவர் பொது முடக்க விதிமுறைகளை மீறியதாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து ரசீதும் அளித்துள்ளார்.
மக்களும் அவரை உண்மையான போலீஸ் என்று நம்பி அவரிடம் அபராதம் கட்டி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு போலீசாரை நிறுத்தி பெண் போலீசாக நடித்தவர் அபராதம் கேட்டுள்ளார்.
அவர் போலி போலீஸ் என்று தெரிந்து அபராத சீட்டையும் கண்டு கொண்ட போலீசார், உடனடியாக அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அவர் போலீஸ் போல நடித்து பணம் வசூலித்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசுக்கே விபூதி அடிக்க முயன்ற அந்த பெண் போலீசை சுற்றிவளைத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.