Monday, May 6, 2024
-- Advertisement--

ட்விட்டரில் சண்டை போட்டு கொண்ட ஹ.ராஜா – குஷ்பு…!!! வெயில் அதிகம் ஆகிடிச்சி என்று குஷ்பு கிண்டல்.

பிரதமர் மோடி அவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாடினார். நீண்ட நாட்களுக்கு பிறகு பிரதமர் மோடி பேச போகிறார் என்ற உடனே மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர். மக்களின் கஷ்டத்தை பற்றியும் மக்களுக்கு உதவ ஏதாவது திட்டத்தைப் பற்றியும் பேசுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் இந்தியாவைப் பார்த்து பல நாடுகள் வியந்து உள்ளது. என்பதையே நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்தார்.

அந்த நேரத்தில் நடிகை குஷ்பூ எட்டு மணி ஆச்சு வெறும் காத்துதான் வந்தது என்று கிண்டலாக ட்விட் ஒன்றை செய்திருந்தார். அதன்பின் போங்கடா என் சமையல் ஆவது நேரத்தில் முடித்திருப்பேன் டைம் வீணா போச்சு என்று மறுபடியும் ஒரு ட்விட் போட்டார்.

குஷ்புவின் அந்த ட்வீட்டை பார்த்த ஹெச் ராஜா முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும் நான் நான்கு ஆண்டுகள்தான் மத்திய பிரதேசத்தில் இருந்தேன் ஹிந்தியை ஹிந்தியில் தான் எழுதுகிறேன் என்று கூறி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த குஷ்பு ஏன் உங்களுக்கு எரியுது நான் எங்கேயுமே பிரதமர் பெயர் சொன்னேனா. எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியும். அதனை உங்களிடம் நிரூபிக்க எனக்கு தேவை இல்லை என்று பதில் அளித்துள்ளார் குஷ்பு. மக்கள் ஒரு பக்கம் கஷ்டத்தில் இருக்க இன்னொரு பக்கம் இந்த சண்டை வேறா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles