செய்யாறு அருகே காமெடி நடிகர் யோகிபாபு கட்டிய கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நகரம்பேடு கிராமத்தில் காமெடி நடிகர் யோகிபாபு தன் சொந்த நிலத்தில் வாராஹி அம்மன் கோவிலை புதியதாக கட்டினார்.
இதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜை செய்து கலச ஊர்வலம் நடந்தது. பின் புனித நீர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் நடிகர் யோகி பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். பெண் மூலவர் வாராஹி அம்மனுக்கு புனித நீரை ஊற்றி நடிகர் யோகிபாபு அபிஷேகம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.