Monday, May 20, 2024
-- Advertisement--

ஆச்சு அசல் மாற்றான் சூர்யா போல ஒட்டிப்பிறந்த குழந்தைகள் ..!!! ஆச்சர்யத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒட்டிப்பிறந்த இரட்டைகுழந்தைகள். மாற்றான் படத்தில் சூர்யா எப்படி ஒட்டி ஒன்றாக பிறப்பாரோ அதேபோல் இரு குழந்தைகள் ஒன்றாக ஒட்டி பிறந்துள்ளது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்.

சுகுமார் என்பவரின் மனைவி சுஷாந்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கடுமையான வயிற்று வலி காரணமாக பேறுகாலத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிரசவ வலியால் துடித்த சுஷாந்தி அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது அப்பொழுது சுகப்பிரசவம் செய்ய முயற்சி செய்த மருத்துவர்கள் சுஷாந்தி வலி தாங்க முடியாமல் தவிர்த்ததால் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியில் எடுத்தனர் அந்தக் குழந்தைகளின் தோற்றத்தை பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்.

குழந்தைகள் ஒட்டிப் பிறந்து இருந்தது அதுமட்டுமல்லாமல் அந்தக் குழந்தைக்கு நான்கு கால்கள்,நான்கு கைகள், இரண்டு பிறப்புறுப்புகள் கொண்டு ஒரு தலையுடன் இருப்பதை கண்டு வியந்து போனார்கள் மருத்துவர்கள். பிறந்த குழந்தைகள் ஒட்டிப் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதனை எப்படி கையாள்வது என்று மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். பிறந்த இரண்டு குழந்தைகளுமே ஆண் குழந்தைகள்.

இந்தக் குழந்தையை பெற்றெடுத்த சுஷாந்தி சுகுமார் இருவரும் வெளி மாநிலத்தினர் இவர்கள் கொரோனா காலத்தில் வெளிமாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமல் தமிழ்நாட்டிலேயே குழந்தை பெற்றுக் கொண்டனர். குழந்தை பிறந்த சந்தோசம் அதிகமாக இருந்தாலும் இந்தக் குழந்தையின் தோற்றத்தை எப்படி சரி செய்வது என்று வருந்தி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles