சமீபகாலமாக இந்து மத கடவுளுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வாயிலாக முருகப்பெருமான் பக்தி பாடல் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வெளிவந்தது.
இதனைத்தொடர்ந்து நாத்திகர்களும் இந்துமத கடவுள் பக்தர்களும் மிகவும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான பெஸ்தவர் வீதி மாகாளி அம்மன் கோவிலில் சில விஷமிகளால் கோவிலில் முன்னே உள்ள திரிசூலம் சேதமடைந்துள்ளது, மேலும் மூலவர் தேவியின் விக்ரக புடவையும் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களி பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் வானதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.