Thursday, May 2, 2024
-- Advertisement--

என்ன நடக்குது தமிழ்நாட்டுல…!!! முதல்வரின் கொள்கையை அவரது மனைவியே ஏற்காதபோது தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஏற்பார்கள். பாஜக நா துணிச்சல் தைரியம் – குஷ்பு ஆவேசம்.

மதம் மாற கூறி கட்டாயப்படுத்துவது ஆக மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யா அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று தான் அவருடைய சொந்த ஊரில் நடைபெற்றது அதில் பாஜகவினர் கலந்து கொண்டனர். மக்கள் சிலர் இந்த விஷயத்தை அரசியல் ஆகாமல் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வந்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பாஜகவினர் கேட்டு வருகின்றனர் இந்நிலையில் பாஜகவினர் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து பாஜகவை சேர்ந்த குஷ்பு அவர்கள் பேசியது தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை இழந்திருக்கிறோம் உடம்புல ரத்தம் ஓடுறவங்களுக்கு ஒரு குழந்தையை பலி கொடுத்த வலி என்னனு தெரியும் ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அந்த வலி தெரியல என்று ஆவேசத்துடன் பேசத் தொடங்கிய குஷ்பூ அவங்களுக்கு தெரிந்தது அரசியல் அரசியல் அரசியல் மட்டும் தான் மக்களுக்கு ஏமாத்தி ஓட்டு எப்படி ஓட்டு வாங்கலாம் தான் அவங்களுக்கு தெரியும். தமிழ் மண்ணில் வாழ்ந்த ஒரு குழந்தையை தானே இழந்து இருக்கிறோம் ஏன் அதை பத்தி இன்னும் முதலமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசல ஒவ்வொரு விஷயத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் எத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள். ஏன் இந்த விஷயத்திற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. அந்தக் குழந்தை வீடியோல தெளிவா சொல்லி உள்ளார் அதைவிட என்ன பெரிய ஆதாரம் என்ன தேவை இருக்கு ரத்தகண்ணீர் ஒரு தாயாக நான் விடுகிறேன் என்று தொடர்ந்து பேசிய குஷ்பு. திருமாவளவன் அவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை ஏதாவது ஒரு வார்த்தை பேசினாரா எதை நோக்கி தமிழ்நாட்டில் போயிட்டு இருக்கோம்.

அவ்வளவு வாக்குறுதி கொடுத்தீங்களே பல அதுமட்டுமல்லாமல் பாட்டு எழுதினீர்களே ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப்போறாரு என்று . என்ன நடக்குது தமிழ்நாட்டில் திராவிடன் என்று சொல்றிங்க ஆனா உங்க வீட்டில் என்ன நடக்குது கோவிலுக்குப் போனாலும் உங்க மனைவி கோபுரம் பக்கத்தில் நின்னு போஸ் கொடுத்து போறாங்களே . உங்கள் வீட்டிலேயே உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை எப்படி தமிழ் மக்கள் உங்கள் கொள்கைளை எடுத்துப்பாங்க என்று கூறினார்

அதனைத் தொடர்ந்து பேசிய குஷ்பு மோடி அவர்களை பற்றி பேசுறிங்களே சமீபத்தில் உலகத்திலேயே மிகச் சிறந்த தலைவர் யார் என்று வெளியிட்டு உள்ளார்கள் அதில் பிரதமர் மோடி அவர்தான் 71% சதவீதம் முதலில் இருக்கிறார். இந்த மதமாற்ற பிரச்சினைக்கும் குரல் கொடுக்க மாட்டேங்கிறாங்க நான் இருக்கேன் நான் வந்து மைனாரிட்டி கம்யூனிட்டி சார்ந்தவள் நானே ஒரு ஹிந்துவை கல்யாணம் பண்ணிக்கிட்டு பொட்டு வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டுல நாம மத மாற்றம் செய்யாமல் நிம்மதியாக வாழ முடியும் என்று தான் சொல்கிறேன் அதற்கு உதாரணம் நான்தான் என்று கூறினார்.

யார் தவறு செய்தாலும் நாங்கள் கேட்போம் கேட்கும் தைரியம் துணிச்சல் பாஜகவிற்கு தான் இருக்கிறது. எங்களுக்கு இருக்கிற துணிச்சல் தைரியம் வேற எவனுக்கும் கிடையாது அந்த துணிச்சல் அந்த தைரியம் வருவதற்கு காரணம் என்ன என்றால் மனசாட்சிக்கு உண்மையாக இருக்கிறோம்.

நமக்கு தமிழ்நாட்டில் அண்ணாமலை ஜி இருக்காங்க அவரது தைரியத்தைப் பத்தி துணிச்சல் பத்தியா பேசணும் அவரோட துணிச்சல் தைரியத்தை பற்றி கர்நாடகல கேளுங்க அப்படி புட்டு புட்டு வைப்பாங்க.

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் கண்ணீரை துடைக்க பாஜக கூடவே நிற்கும் அதற்காக தான் நாங்கள் இங்கு நிற்கிறோம் தைரியம் இருந்தா வாங்க வந்து எல்லா கட்சியினரும் தெருவில் வந்து நில்லுங்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் CBI விசாரணை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம் என்று கூறியுள்ளார் குஷ்பு.

குஷ்புவின் இந்த பேச்சுக்கு உங்களுடைய கோரிக்கைகளை முதல்வரிடம் வையுங்கள் ஆனால் முதல்வரை பற்றி இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles