பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. அதையடுத்து கேஜிஎப் 2 ஆம் பாகம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக படம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கு திரைகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் போன்றோர் நடித்திருந்தனர்.
படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இதில் தமிழக உரிமையை தயாரிப்பாளர் ஆர் எஸ் பாபு பெற்று திரையரங்குகளில் வெளியிட்டார். மேலும் கேஜிஎப் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே முதல் நாளிலே கேஜிஎப் திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதோடு தமிழகத்தில் ரூ. 7 கோடியும், கேரளாவில் ரூ.6 கோடியும் வசூல் செய்துள்ளது. மேலும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் 70 கோடி வசூல் செய்திருந்தது இதை வைத்து பார்க்கும்போது பீஸ்ட் படத்தை வசூலில் கட்டித் தூக்கிய கேஜிஎப் திரைப்படம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.