கன்னட சினிமாக்கள் காணாமல் போய்விட்டது என்று பரவலாக பேச்சு அடிபட்டு வந்த நேரத்தில் பூகம்பமாக வெளிவந்து ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாள, சினிமா ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது தான் யாஷ் நடித்த KGF திரைப்படம்.
எப்பா என்னடா இப்படி ஒரு மாஸ் படமாக இருக்கிறது என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி பார்த்த திரைப்படம் கே ஜி எஃப். கேஜிஎப் -ன் முதல் பாகம் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் 2 வெளியானது.
கே ஜி எஃப் 2-வும் வசூல் அள்ளிக் கொடுத்தது கன்னட சினிமாவில் இப்படியெல்லாம் படங்கள் எடுக்கிறார்களே என்று பல தரப்பையும் ஆச்சரியப்படுத்தியது.
கேஜிஎப் திரைப்படத்தில் இடம் பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களை கண்கலங்க வைத்தது குறிப்பாக யாஷ் சிறுவயதில் தனது அம்மாவுடன் பட்ட கஷ்டங்கள் தன்னுடைய அம்மா தன்னை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார் போன்ற காட்சிகள் அதனை தொடர்ந்து வந்த தந்தானே தான தானே தானே பாடல் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. கேஜிஎப் யாசின் அம்மாவாக வந்த சாந்தாம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
யாசின் அம்மாவாக நடித்த அந்தப் பெண் யார் என்று இணையத்தில் தேட ஆரம்பித்த பின்பு தான் தெரிந்தது நடிகையின் பெயர் அர்ச்சனா ஜோயிஸ்.
இளம் வயதிலேயே இவ்வளவு அழகான ஒரு நடிகையை ஒரு மகனுக்கு தாயாக நடிக்க வைத்து உள்ளனர். அர்ச்சனாவை பார்க்கவையில் இவரா கே ஜி எஃப் படத்தில் யாசுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்று ஆச்சரியப்படும் வகையில் இருந்தது.
இது பற்றி ஒரு விருது வழங்கும் விழாவில் அர்ச்சனாவிடம் கேட்டதற்கு நான் ஒரு குழந்தைக்கு தாயாக தான் நடித்தேன். யாஷுக்கு தாயாக நடிக்கவில்லை. இருந்தாலும் இந்த கதாபாத்திரம் எங்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த வாய்ப்பினை கொடுத்த KGF படத்தின் இயக்குனர் பிரசாந்த் அவர்களுக்கு நன்றி என்று உருக்கமாக கூறி இருந்தார் அர்ச்சனா.