கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகமானார் முதல் படமே சரியாக அமையவில்லை ஆனால் அதற்கு அடுத்த படத்தில சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்திருந்தார். ரஜினி முருகன் மாபெரும் வெற்றிப்படமாக கீர்த்தி சுரேஷுக்கு அமைந்தது அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் முன்னணி ஹீரோக்கள் ஆன விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை பெரிதாக்கினார். சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தெலுகுவில் மகாநதி என்று எடுத்து அதை தமிழில் நடிகையர் திலகம் என்று வெளியிட்டிருந்தனர் அதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பதை விட வாழ்ந்து இருந்தார் என்று சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
கீர்த்திசுரேஷ் கமர்சியல் ஹீரோயின் மட்டுமல்ல நல்ல நடிக்கக்கூடிய சப்ஜெக்ட் ஹீரோயின் என்று அப்போதுதான் அனைவரும் உணர ஆரம்பித்தார்கள் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளார்.
இந்நிலையில் தனுஷ் அவர்களின் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நடிக்கும் சாணி காயிதம் திரைப்படம் ரசிகர்கள் அனைவராலும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ராக்கி என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அவர்களின் இரண்டாவது படம் அது மட்டுமல்லாமல் இந்தப் படம் ரிலீசுக்கு பிறகு கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து திரையுலகமே ஆச்சரியப்படும் என்று கூறிவருகிறார்கள் நம்பத்தகுந்த சினி வட்டாரத்தினர்.
செல்வராகவனும் கீர்த்தி சுரேசும் போட்டிபோட்டு நடித்துள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் பாலியல் வன்முறை செய்யும் காட்சி ஒன்று இருப்பதாகவும் அதில் ஒரு வயதானவர் உட்பட பலர் அவரை பாலியல் வன்முறை செய்யும் போது அனைவரையும் கண்கலங்க வைத்து மனதை உருக்கும் காட்சியாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தப் படம் அமேசான் பிரைம்ல் வருகின்ற ஏப்ரல் மாதம் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. தியேட்டரில் இந்தப் படம் வந்தால் வேற லெவல் ரெஸ்பான்ஸ் இருந்திருக்கும் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.