கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவுக்கு பொருத்தவரை தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ் 2015 ஆம் ஆண்டில் இது என்ன மாயம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்.
அதன்பின் ரஜினி முருகன் என்ற படத்தின் மூலம் பெரிய பிரபலத்தை அடைந்தார். இவருடைய ஹோம்லியான முகத் தோற்றத்துக்கு இன்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கிட்டத்திட்ட ஆறு வருடங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நிதின் உடன் நெருக்கமாக நடித்த ஒரு சில படுக்கை அறை காட்சிகள் வெளியானது அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் தமிழில் துளிகூட கிளாமர் காட்டாத கீர்த்தி தற்பொழுது தெலுங்குவில் இப்படி நடித்திருப்பது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
கீர்த்தி தன்னுடன் வேலை பார்க்கும் பணியாளர்களை அன்புடன் கையாள்வதும் அதுபோல தன்னிடம் வேலை பார்க்கும் முக்கிய பணியாளர்கள் வீட்டில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது அன்பை வெளிப்படுத்தி வந்தார். சத்தமில்லாமல் நிறைய உதவிகளையும் செய்து வருகிறாராம் கீர்த்தி.
தற்பொழுது இந்த லாக்டவுன் நேரத்தில் யோகா கற்று வரும் கீர்த்தி அவரது ரசிகர்களையும் யோகா செய்யச் சொல்லி இணையம் வழியாக தெரிவித்துள்ளார் அத்துடன் தான் யோகா செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.