கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை. முதலில் கமர்சியல் படங்களில் மட்டும் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்பொழுது கதை சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிவிட்டார்.
சமீபத்தில் இவர் பிரபல இயக்குனர் செல்வராகவன் அவருக்கு ஜோடியாக சாணி காகிதம் என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கீர்த்திக்கு நடிகையர் திலகம் என்ற படம் சரியான தீனியாக இருந்தது அவருடைய நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்தது. அது போல இந்த படம் வெளிவந்த பிறகு கீர்த்தியின் நடிப்பு இன்னும் பேசப்படும் என்று கூறி வருகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.
ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் கீர்த்தி தனக்கு ஓய்வு கிடைக்கும்போது தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருவார்.
சமீபத்தில் கீர்த்தி தனது பெற்றோருடன் குருவாயூர் சென்று கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். அதன்பின் தனது பெற்றோர்களுடன் கேரளத்து சேலையில் அழகு பதுமையாக புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.