கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை அது போல தெலுங்கு சினிமாவிலும் தற்போது பலமான மார்க்கெட்டை கைப்பற்றி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கீர்த்தி அந்த படம் பெரிய அளவில் கை கொடுக்காவிட்டாலும் ரஜினி முருகன் என்ற படத்தில் கார்த்திகா தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். அதனை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த கீர்த்திக்கு மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தொடர்ந்து வந்தது.
சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாக நடித்திருந்தார் அண்ணாத்த திரைப்படத்தில் அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மரைக்காயர் என்ற மோகன்லால் அவர்களின் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு போல மலையாளத்திலும் மார்க்கெட்டை வலுப்படுத்த வேண்டும் என்று நினைத்த கீர்த்தி தற்பொழுது வாசி என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தை தயாரிப்பது கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ் அவர்கள் தான்.
சூட்டிங்கில் படுபிஸியாக இருந்த கீர்த்தி தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் வெளிவந்து உள்ளது.
அனைவருக்கும் வணக்கம், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டாலும், லேசான அறிகுறிகளை அனுபவித்து வருவதால், கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்துள்ளேன், இது வைரஸ் பரவும் வேகத்தை பயமுறுத்தும் நினைவூட்டலாகும். அனைத்து கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பான கண்காணிப்பில் உள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து பரிசோதிக்கவும்.
நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால், கடுமையான அறிகுறிகளைத் தவிர்க்கவும், உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும், தயவுசெய்து உங்கள் தடுப்பூசிகளை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன், விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்குவேன் என்று பதிவிட்டு உள்ளார்.