தமிழில் முன்னணி நடிகைகள் ஒரு பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி தற்பொழுது சாணிய காகிதம் என்ற படத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் நடித்து கொண்டு இருக்கிறார். கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் தெலுங்கிலும் தற்பொழுது ஏறுமுகத்தில் உள்ளதால் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிப் படங்களில் நடிப்பதிலும் செம பிஸியாக இருக்கிறார்.
சமந்தா நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துவிட்டு சில மாதங்கள் ஓய்வு எடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு தனது நண்பர்களுடன் வெளிப்பயணகள் சென்று வருகிறார். நேற்று புரட்டாசி தொடக்கம் என்பதனால் திருமலை திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் செய்துவிட்டு வந்தார் சமந்தா.
திரிஷா பொறுத்தவரை வயது ஏறினாலும் அவருக்கு என்ற இடம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. தற்பொழுது பொன்னியின் செல்வன் என்ற படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 38 வயது ஆகியும் இன்னும் இளமை குறையாத அழகியாக வலம் வருகிறார் த்ரிஷா. சில நாட்களுக்கு முன் த்ரிஷா சைக்கிளில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த 3 ரோசஸ் ஒன்றுகூடி சில நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி பார்ட்டியில் நேரங்களை செலவிட்டு உள்ளனர். காதில் ரோஜாப்பூவை வைத்துக்கொண்டு ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா. இந்தப் பார்ட்டியில் சிவகார்த்திகேயன் ஹீரோ பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் அவர்களும் கலந்து கொண்டார்.
தற்போது இந்த த்ரீ ரோசஸ்சின் புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.