நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
அஜித்தை தவிர மற்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த கீர்த்தி தற்போது தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவன் அவர்களுடன் சாணி காகிதம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கீர்த்தி தற்பொழுது செல்வராகவனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்தில் இன்னும் நடிப்பில் மிரட்டி இருப்பதாக சினி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சாணி காயிதம் படம் ரிலீஸ் ஆனால் கீர்த்தியின் நடிப்பு இன்னும் பலராலும் பேசப்படும் என்று வருகிறார்கள்.
இந்நிலையில் கீர்த்தி தமிழில் முன்னணி நடிகைகள் வந்துவிட்டோம் தெலுங்கிலும் ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னமோ தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கீர்த்தி நடித்து கடைசியாக தெலுங்கில் வெளியான ரங்குதே என்ற படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது.
அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு சில காட்சிகளில் ஹீரோ நிதினுடன் நெருக்கமாக நடித்துள்ளார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம கீர்த்தியா இது தமிழில் துளிக்கூட கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த கீர்த்தி தெலுங்கு சினிமாவில் இப்படி தாராளம் காட்டுகிறார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.