கயல் ஆனந்தி பொறியாளன் என்ற ஹரிஷ் கல்யாண் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் கயல் படத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து சண்டிவீரன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கொஞ்சம் ஏடாகூடமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து சின்னச்சின்ன படங்களில் நடித்த அவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
பரியேறும் பெருமாள் பெரிய ஹிட் படமாக ஆனந்திக்கு அமைந்தது. சறுக்கிக் கொண்டே வந்த ஆனந்தியின் சினிமா பாதைக்கு பரியேறும் பெருமாள் ஒரு படியாக இருந்தது. ஆனந்தி திடீரென திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று இரவு திருமணமும் நடந்து முடிந்தது.
பெற்றோர்கள் பார்த்த சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனந்தி. இவர்களது திருமணம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடந்தது இந்த திருமணத்திற்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார் ஆனந்தி. கொரோனா காரணத்தினால் யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லையாம்.
ஆனந்தியின் கணவர் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறாராம். இவர்களது திருமணம் ஆனந்தியின் சொந்த ஊர் வாரங்கல் தெலுங்கானாவில் நடந்துள்ளது.