Friday, May 17, 2024
-- Advertisement--

10 வருடத்திற்கு முன் இறந்த மனைவிக்கு புதிதாக கட்டிய வீட்டில் சிலை வைத்த கணவர்…!!! நெகிழ்ச்சி சம்பவம்.

இந்த பரபரப்பான உலகத்தில் நம் சொந்தங்கள் இறந்தாலும் அவர்களை மனதில் வைத்துக்கொண்டு நாம் அடுத்த வேலையை துவங்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். எப்போதெல்லாம் அவர்களைப் பற்றி ஞாபகம் வருகிறதோ அப்போதெல்லாம் அவர்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த சீனிவாச குப்தா என்ற தொழிலதிபரின் மனைவி 10 வருடத்திற்கு முன் விபத்தினால் உயிரிழந்தார்.

தற்பொழுது சீனிவாச குப்தா அவர்கள் ஒரு பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி தன் குடும்பத்தினருடன் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி கொண்டாட விரும்பினார். ஆனால் அவருடைய மனைவி அவருடன் இல்லாததால் மனம் வருந்திய அவர் மனைவியைப் போல மெழுகு சிலை ஒன்று செய்து அதற்கு பிங்க் நிறத்தில் சேலை அணிவித்து. அதனுடன் புகைப்படமெடுத்து வெளியிட்டார்.

அந்த மெழுகு பொம்மை அச்சு அசல் அவரது மனைவியின் முக சாயலுடன் இருந்தது. அவருடைய மனைவியே நேரில் வந்து குடும்பத்துடன் புதுமனை விழாவை கொண்டாடியது போல இருந்தது. அவரின் மகள்களும் அப்பா அம்மாவை உட்கார வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதனைப் பார்த்தவர்கள் இப்படி ஒரு கணவரா. தன் மனைவி மீது இவ்வளவு காதல் கொண்டு உள்ளாரே என்று ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது அந்த நிகழ்ச்சி. தற்பொழுது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles