Saturday, May 4, 2024
-- Advertisement--

மருத்துவர்களின் அலட்சியமே புனித் மரணத்திற்கு காரணம் ரசிகர்கள் கொந்தளிப்பு..!!! மருத்துவர்கள் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுத்த அரசு..!!!

புனித் ராஜ்குமார் கன்னட சூப்பர்ஸ்டார் 46 வயதான இவருக்கு அக்டோபர் 26 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலே புனித் குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. புனித் அவர்களின் இந்த திடீர் மறைவு கன்னடம் மட்டும் அல்லாமல் பிற மொழி திரையுலகத்தினர் முதல் பொதுமக்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடல் மீது அக்கறையாக இருக்கும் இவருக்கு எப்படி திடீரென்று மாரடைப்பு வரும் என்று ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். இவருக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.

புனித் இறந்த பின் தான் தெரிகிறது சத்தமில்லாமல் அவர் செய்த நிறைய உதவிகள். தனது மனைவி குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் ஏகப்பட்ட உதவிகளை செய்துள்ளார் மனிதன்.

தற்பொழுது உயிரிழந்து 12 நாட்கள் ஆகியும் இன்றும் புனித்தை பற்றி ஏதாவது செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது அவரது ரசிகர்களும் மெழுகுவர்த்தி ஏத்தி புனித் படத்திற்கு மாலை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவுக்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள்.

புனித் ராஜ்குமார் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரமணா ராவ் மற்றும் பிற மருத்துவர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்று அவர்களின் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் வெளியே கே எஸ் ஆர் பி படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது.

போலீசாரும் தீவிர ரோந்து ஈடுபட்டு வருகின்றனர். புனித் ராஜ்குமார் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொண்டதால் அரசின் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles