மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கமலஹாசன் மாபெரும் நடிகர் என்பதை தாண்டி தன்னை சமூகப் பணியிலும் சில வருடங்களாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்த கமலஹாசன் தேர்தலில் தோற்றாலும் என்னுடைய கட்சியை நான் வலுப்படுத்தி தீருவேன் என்று முடிவோடு இருக்கிறார். கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மக்கள் நீதி மையத்தை விட்டு செல்ல கமல் அப்செட் ஆனார்.
சில நாட்களுக்கு முன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய வெளிநாட்டு ரசிகரின் ஆசையை நிறைவேற்ற கமல் வீடியோ காலில் அவருடைய தீவிர ரசிகர் இடம் உரையாடினார். ZOOM கால் வழியாக பத்து நிமிடம் பேசிய கமல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் விரைவில் குணமாக நம்பிக்கை அளித்தார் அத்துடன் திரையுலக மற்றும் அரசியல் பயணம் குறித்தும் கமல் பேசி இருந்தார்.
அப்போது புற்றுநோய் பாதிக்கப்பட்ட அவரது ரசிகர் கமலின் அரசியல் தோல்விக்கு ஆறுதல் கூறியதோடு சென்னை வந்தால் உங்களை பார்க்கலாமா என்று கேட்டு இருந்தார் அதற்கு கமல் நிச்சயமாக என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியைச் சார்ந்த திரு கமல் நாகராஜன் என்பவர் கமலின் தீவிர ரசிகர் அவர் எட்டு வருடங்களாக ஆதரவற்ற 57 சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
இதனை அறிந்த கமல் வாழ்வு கடினமான தேசத்தில் இக்காலத்தில் மரணம் எனும் கௌரவமாக இருக்காதா என்று ஆதங்கப்படும் நோய்மை நிலை இப்போதும் கடந்த 8 ஆண்டுகளாக ஆதரவற்று மரித்தோரை பிரதி பலன் பாராது வழியனுப்பி வைக்கும் நற்செயல் புரிந்து வருகிறார் எங்கள் நாகராஜன் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் கமல்.