மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி சரியான பாதையில் கொண்டுசெல்லும் கமல் தற்பொழுது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று காலையில் வேளச்சேரியில் பிரச்சாரம் செய்த கமல் மதியம் கோவையில் பிரச்சாரத்தை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து மாலையில் மதுரையில் பிரச்சாரத்தை மேற்கொண்டார் இரவில் மீண்டும் கோவைக்கு திரும்பி உள்ளார்.
ஒரே நாளில் மூன்று இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் கமலஹாசன் எங்களுக்கு ஓட்டு போட்டால் தமிழகத்தில் உள்ள ஊழலை ஒழித்து ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.
இலவசங்கள் தருவதைவிட வேலை வாய்ப்புகளை வழங்கி ஒவ்வொருவர் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவோம் என்று கூறினார் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக உரையாடியதில் கோவையில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களின் புழக்கம் அதிகம் இருப்பதை அறிந்து கொண்டேன் இளைஞர்கள் வாழ்க்கையை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே முதல் பணி என்று கூறியிருந்தார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓயாமல் பிரச்சாரம் செய்துவரும் கமலஹாசன் தனது இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனை தனது பிரச்சார களத்திற்கு அழைத்துச் சென்றார் கமல் பிரச்சார வேனில் கமல் நிற்க அக்ஷரா ஹாசன் டார்ச் லைட்டை கையில் வைத்துக்கொண்டு மறைந்திருந்து தனது தந்தை செய்யும் பிரச்சாரத்தின் அழகை பார்த்து ரசித்தார்.