Wednesday, May 1, 2024
-- Advertisement--

தேவர் மகனுக்கு தேவர் சிலை ஊரில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!!

கமலஹாசன் தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பண்ணைபட்டி பிரிவில் மக்கள் நீதி மைய கட்சியின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதற்காக எந்த கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான நடிகர் கமலஹாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கமலஹாசனுக்கு உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். இதனால் அங்கு ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டு இருந்தனர். அவர் அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதிக்காததால் அவர் வெறும் கை கும்பிட்டபடியே சென்றார் .

மேலும் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் இல் கிராம மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் அனுமதி இல்லாததால் அவர் அங்கும் கையசைத்து எப்படி சென்றார்.

தேவர் மகன் படத்தில் கமல் நடித்ததால் கமலஹாசனுக்கு முக்குலத்தோர் மத்தியில் மிகவும் செல்வாக்கு உயர்ந்து இருந்தது. தேனி மாவட்டம் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் அதிகமாக முக்குலத்தோர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles