கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. நடிகர் கமலஹாசன் அமெரிக்கா சென்று வந்த பின் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்தார்.
மேலும் சென்னையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதோடு மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வேண்டினர்.
அதோடு தமிழக முதல்வர் ஸ்டாலின் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் கமலஹாசன் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர. அதோடு நடிகர் ரஜினிகாந்த் கமலிடம் நேரடியாக தொலைபேசி வாயிலாக உரையாடி உடல் நலம் குறித்து விசாரித்தார்.
கடந்த வாரம் கமலஹாசன் முற்றிலும் குணமடைந்து விட்டதாக மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியானது. எனினும் சில நாட்களுக்கு மருத்துவமனையிலேயே தனிமையில் இருப்பார் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை (dec 4) கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். pic.twitter.com/IScdLsBjOL
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2021