காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை. தமிழை விட தெலுங்கு சினிமாவில் நிறைய படங்கள் நடித்ததால் இவருக்கு ஏகப்பட்ட தெலுங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு படங்களில் காட்டிய தாராளம் காஜலின் மார்க்கெட்டை எகிற வைத்தது. கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்றால் முதலில் காஜல் அகர்வாலின் கால்ஷீட்டுக்கு போட்டி போட்டுக்கொண்டு இருந்த தயாரிப்பாளர்களும் உள்ளனர்.
தமிழை காட்டிலும் தெலுங்கில் அம்மணி தாராளம் காட்டுவதால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் காஜலை கொண்டாடி வந்தனர். குறிப்பாக காஜலுக்கு பெரிய திருப்பத்தை கொடுத்தது மகதீரா என்ற தெலுங்கு படம்.
காஜல்அகர்வால் கௌதம் என்ற தனது நண்பரை திருமணம் செய்துகொண்டு காதல் வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டார். குறிப்பாக கடலுக்கு அடியில் ஹனிமூன் போன புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு காஜல் அகர்வால் தனது காதல் கணவருடன் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார். பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் என்ற மெஸ்ஸில் உணவுகளை சுவை பார்த்து அந்த மெஸ் வைத்து நடத்துபவர் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பொள்ளாச்சி வந்தா சாந்தி மெஸ்சுக்கு வந்து சுவைத்து பாருங்க என்று இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.