காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை. பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அதன்பின் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
தெலுங்கு சினிமாவில் காஜல் அகர்வால்க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து நிறைய தெலுங்கு படங்களில் கமிட்டானார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வால் சமீபத்தில் போதும் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தனது காதல் கணவருடன் தேனிலவை கடலுக்கு அடியில் கொண்டாடினார் அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டிருந்தார். தற்பொழுது தனது நேரத்தை தனது கணவருடன் செலவிட்டு வருகிறார் தற்போது தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக உரையாடிய காஜல் எனது குடும்பத்தினர் குறிப்பாக எனது கணவர் நான் தொடர்ந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
அவரே எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் அதனால் நடிப்பில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது நான் எவ்வளவு காலம் நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என் கணவர் நடிப்பை கைவிடும்படி சொன்னால் உடனே நடிப்பதை நிறுத்தி விடுவேன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒப்பந்தமாகி உள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு கொரோனா பிரச்சினைகள் முடிந்து சகஜ நிலைக்கு திரும்பியதும் புதிய படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.
தற்பொழுது காஜல் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். லைக்கா நிறுவனத்திற்கும் சங்கருக்கும் உள்ள சில பிரச்சனைகள் முடிவிற்கு வந்தால் தான் படத்தின் அடுத்த நிலை பற்றி தெரிய வரும்.