ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஒரு நேரத்தில் வலம் வந்தவர். தற்பொழுது சமூகசிந்தனையும், பெண்களுக்கு ஊக்கம் தரும் கதை கொண்ட படங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.
ஜோதிகா நடித்து கொண்டு இருக்கும் படம் தஞ்சாவூரில் சில நாட்களுக்குமுன் எடுக்கப்பட்டது. அந்த கதை தஞ்சையை சார்ந்த கதை என்பதால் ஜோதிகாவை லைவ் லொகேஷனலில் நடிக்க வைத்தனர். ஒரு மருத்துவமனையில் எடுக்க வேண்டிய காட்சி என்பதால் அந்த காட்சியை செட் போடாமல் தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடிக்க வைத்தனர்.
இதையும் படிங்க: விவசாயத்தில் களம் இறங்கிய IT ஊழியர்கள்…!!! இவர்களை பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள்.
நோயாளிகள் இல்லாத இடத்தில் ஷூட்டிங்கை யாருக்கும் தொந்தரவு இல்லாமல் எடுத்தார்களாம். அந்த நேரத்தில் ஜோதிகா மருத்துவமனையில் உள்ள மற்ற அறைகளை பார்த்தாராம். அந்த அறைகளை பார்த்தும், மக்களை பார்த்தும் மிகவும் வருத்தப்பட்டார். இவளோ பெரிய கோயில் அருகில் உள்ள மருத்துவமனை இப்படி உள்ளதே என்று வருத்தப்பட்டாராம் அதனை தன் ஜோதிகா பிரஸ் மீட்டில் சொன்னார் என்று அந்த படத்தின் இயக்குனர் சரவணன் கூறினார்.