Thursday, May 2, 2024
-- Advertisement--

சர்ச்சையை கிளப்பிய பராமரிப்பு இல்லாத தஞ்சாவூர் மருத்துவமனையை அடையாளம் தெரியாதபடி மாற்றிய ஜோதிகா..!!! வெளியான புகைப்படங்கள் உள்ளே.

ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகர் சிவக்குமாரின் அன்பு மகன் சூர்யாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர். தற்பொழுது சூர்யா ஜோதிகாவிற்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா தற்பொழுது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ஹீரோயினாக நடிப்பதை விட பெண்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இருக்க வேண்டும் அல்லது சமூக அக்கறை கொண்ட படமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி கதை கேட்டு வருகிறார் ஜோதிகா.

ஜோதிகா நடித்த 36 வயதினிலே பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது அதனைத் தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களில் நடிக்க நினைத்த ஜோதிகா ராட்சசி என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் கல்விமுறை மற்றும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடித்திருந்தார். அந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்றிருக்கிறார். ஒரு காட்சி தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அப்போது அந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற ஜோதிகா அந்த மருத்துவமனையை பார்த்து நொந்து போயிருக்கிறார் ஒரு மருத்துவமனையில் அடிப்படை வசதிகூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதை கண்ணெதிரே பார்த்திருக்கிறார்.

தஞ்சையில் சூட்டிங் நடந்ததால் அங்கு உள்ளவர்கள் தஞ்சை பெரிய கோவில் சென்று வாருங்கள் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர் மருத்துவமனையின் பரிதாப நிலையைப் பார்த்த ஜோதிகா பெரிய கோவிலுக்கும் செல்லாமல் நேரடியாக வந்துவிட்டாராம் .இதனை ஒரு விருது வழங்கும் விழா மேடையில் ஜோதிகா இந்த சம்பவத்தை கூறி கோவிலுக்கு பராமரிக்கும் தொகைகளில் சற்று மருத்துவமனையையும் பராமரியுங்கள் என்று கூறினார். ஜோதிகாவின் இந்தப் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்தார்கள். ஜோதிகா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றெல்லாம் அவருக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை வழியாக தஞ்சையில் உள்ள அந்த மருத்துவமனைக்கு பராமரிப்பு செலவை தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்.

தற்பொழுது அந்த மருத்துவமனையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த மருத்துவமனை மோசமான நிலையில் பராமரிப்பு இல்லாமல் இருந்திருக்கிறது தற்பொழுது அதனை பராமரித்து புத்தம்புது மருத்துவமனையாக மாறி இருக்கிறது. இது அந்த புகைப்படங்கள்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles