Wednesday, May 1, 2024
-- Advertisement--

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜித்தன் ரமேஷ் முதல் முறையாக வெளியிட்ட மனம் திறந்து பேசிய வீடியோ…!!

தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 ல், 70 நாட்கள் வரை இருந்து மக்களால் வெளியேற்ற பட்டவர் ஜித்தன் ரமேஷ். இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரியின் மூன்றாவது மகன் ஆவார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஒருவரான ஜீவாவின் அண்ணனும் ஆவார். இந்நிலையில் இவர் ஜித்தன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

முதல் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. ஆனால் அதற்கு அடுத்து இவர் நடித்த படங்கள் மாபெரும் தோல்வியை கண்டு சினிமாவில் நீடித்து நிற்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் பிசினஸில் களமிறங்கி அதில் வெற்றி கண்டு வந்தார்.

இருப்பினும் ரமேஷிற்கு சினிமாவில் எப்படியாவது சாதிக்கவேண்டும் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசை இருந்ததால் இந்த பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் கலந்த ஆரம்பத்திலிருந்தே தன் அப்பாவின் நிழலில் நிற்க கூடாது. சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறேன் என்று கூறினார். அந்த நாட்களும் ராஜா வீட்டு கண்ணுக்குட்டி ஆக இருந்த ரமேஷ் டபுள் ஏவிக்சன் மூலம் வெளியேறினார்.

பிக் பாசில் இருந்த 70 நாட்களும் அவர் சொகுசாக தான் இருந்தார். பிக்பாஸில் வழக்கமாக நடைபெறும் எவிக்ஷன் போல இல்லாமல் இவர் கன்சக்சன் ரூமில் இருந்து நேராக கமல் இருக்கும் மேடைக்கு வந்தார். அது இவருடன் இருந்த போட்டியாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. வாரவாரம் ஒருவர் எலிமினேஷன் ஆனாலும் அவர்களை போட்டியாளர்கள் கட்டித்தழுவி பாசமழை பொழிந்து வெளியே அனுப்புவது வழக்கம் ஆனால் ரமேஷுக்கு இது போல எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ரமேஷ் முதன்முதலாக மக்களுக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை இத்தனை நாள் சப்போர்ட் செய்து அனைவருக்கும் மிகவும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CIx7yQYBCfp/

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles