செல்வி ஜெயலலிதா ஆளுமை கொண்ட தலைவி அதிமுக என்ற கட்சியை கட்டுக்கோப்பாக நடத்திய பெண்மணி. பல கோவில்களுக்கு நிறைய நன்கொடைகள் செய்துள்ளார்.
வாழ்க்கையில் தனது கடைசி காலம் மக்களுக்காக வாழ நினைத்த அவர் எப்படி இறந்தார் என்ற மர்மம் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தும் ஒரு சிசிடிவி கேமரா காட்சிகளில் கூட வரவில்லை, அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த அறைக்கு வெளியே கூட கேமராக்கள் இல்லை என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
ஒரு நாட்டின் முன்னாள் முதல்வருக்கு என்ன ஆனது எப்படி இறந்தார் என்பதை ஆட்சி முடியும் வரை விசாரணை செய்து வந்தார்கள் ஆட்சி முடிந்தும் ஆறுமுக சாமி அவர்களின் விசாரணை முடியவில்லை. இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று கேரள ஜோதிடரை வைத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
சோழி உருட்டி தனது கணிப்பை சொல்லும் பிரசன்ன ஜோதிடர் அண்ணாசாமியிடம் பேட்டி எடுப்பவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தி அடையவில்லை அது சசிகலா அவர்களை பழிவாங்குவதற்காக சுற்றிக்கொண்டிருக்கிறது என்று செய்திகள் எல்லாம் வருகிறது அது உண்மையா என்று கேட்டதற்கு சற்று யோசித்த பின் சோழி உருட்டி பார்த்து ஜெயலலிதா அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழவில்லை. சிம்ம ராசி அவர் கடைசிவரை அவர் நிம்மதியாக அவருடைய ஆத்மா வாழவில்லை.
ஜெயலலிதா வாழும் போதும் தனக்காக வாழவில்லை. அவருக்கு சந்தோசம் கொடுத்தது மக்களுக்கு சேவை செய்தது மட்டும் தான் குறிப்பாக கோவில்களுக்கு நிறைய அவர் நல்லது செய்துள்ளார் பலருக்கு அன்னதானம் செய்யும் திட்டங்களையும் கொண்டு வந்தார். இது போல நல்ல விஷயங்கள் மட்டுமே அவருக்கு நிம்மதியைக் கொடுத்தது.
தற்பொழுது ஜெயலலிதா அவர்களின் ஆத்மா சாந்தி அடையவில்லை அந்த ஆத்மா யாரையும் எதுவும் செய்யாது அது சாந்தி அடையாமல் இருப்பதற்கு தக்க பரிகாரங்களை செய்தால் அந்த ஆத்மா சாந்தி அடைந்து விடும் என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நெறியாளர் கொரோனா தொற்று பரவல் பற்றி கேட்டதற்கு ஜோதிடர் அவரிடம் இருந்த சோளியை உருட்டி பார்த்து இது சொல்லவே மனசுக்கு கஷ்டமா இருக்கு இந்த வருடத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பாதிப்பு இருக்கும். எச்சரிக்கையாக இருங்கள் தற்காப்பு உடன் இருங்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இவரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொரோனா பற்றி கூறியது பலருக்கு திடுக்கிடும் தகவல் ஆக இருந்தாலும் பலர் இதுபோல நிறைய சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள் எதை நம்புவது என்று புரியவில்லை என்று கூறி வருகிறார்கள் மக்கள்.