ஜெய்பீம் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம். 20 ஆண்டுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை எந்த ஒரு சினிமா தனமும் இல்லாமல் அப்படியே எடுத்து சொல்லிய விதத்தில் இயக்குநர் ஞானவேல் ஜெயித்துவிட்டார்.
தவறே செய்யாத ராசா கண்ணு என்பவரை சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. குறிப்பாக காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகள் இப்படியும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததா என்று பலரை ஆச்சரியப்பட வைத்தது.
சூர்யாவின் ஜெய் பீம் படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்றாலும் இந்தப் படத்தில் சொல்ல வந்த கருத்து அனைவரிடமும் போய்ச் சேர்ந்துவிட்டது. சூர்யா இத்தகைய முயற்சி எடுத்ததற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் வருகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டி விட்டு மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். சூர்யாவும் பழங்குடியினர் இருளர் நலனுக்காக 1 கோடி ரூபாய் தமிழக அரசிடம் கொடுத்தார்.
மக்கள் மனதில் ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்திய இந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று அனைவரும் கூறிவரும் நிலையில் ஜெய்பீம் படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் IMDB என்ற இணையதளத்தில் தான் தமிழ் மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரேட்டிங் கொடுக்கப்படும்.
அதனை பார்த்து அனைவரும் படத்தின் தரத்தை தெரிந்து கொள்வார்கள். தற்பொழுது ஜெய்பீம் படத்திற்கு IMDB ரேட்டிங் வெளியாகியுள்ளது.ஜெய்பீம் படம் IMDB ரேட்டிங் 9.6 /10 பெற்று உள்ளது. இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இல்லாத ரேட்டிங் IMDBயில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து சூர்யா ரசிகர் மட்டுமன்றி தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.