Saturday, May 18, 2024
-- Advertisement--

எனக்கு வயசு இப்போ 8 ஆகுது 18 வயசு ஆன உடன் என் முதல் ஓட்டே STALIN அங்கிளுக்கு தான் – ஜெய் பீம் அல்லி.

ஜெய் பீம் சூர்யாவின் தயாரிப்பில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய புரட்சியை செய்த திரைப்படம். ஒரு உண்மை சம்பவத்தை உலகத்துக்கே தெரியப்படுத்திய படம்.

ராசா கண்ணு என்பவர் எந்த ஒரு தவறும் செய்யாமல் சித்திரவதை செய்யப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் இந்த படத்தின் மூலம் உலகத்திற்கு தெரிய வந்தது.

ஜெய் பீம் படம் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்கட்டியது இந்த திரைப்படத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினர் மற்றும் சூர்யா அவர்களை பாராட்டி மூன்று பக்கத்துக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்தில் தாக்கத்தால் பழங்குடியினர் மக்களுக்கு நல திட்டங்களை அறிவித்தார். மதிப்பிற்குரிய முதலமைச்சர் அய்யாவுக்கு வணக்கம் படத்துல நடிச்ச அல்லி பேசுறேன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீங்க ஜெய் பீம் பிரிவியூ ஷோ பார்த்து அவர்களுக்கு பட்டா வழங்கி கொடுத்தீங்க வீடுகட்டிக் கொடுத்து அவங்க வரலாற்றையே மாற்றிவிட்ட தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் நிறைய நலத்திட்ட உதவிகள் செய்து இருக்கிறீர்கள் நான் உங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்.

நான் இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துப்பேன். உங்க ஆட்சியில நிறைய பேருக்கு நிறைய நலத்திட்ட உதவிகள் நடந்துகிட்டு இருக்கு. இந்த காரோண காலகட்டத்தில் உயிரை கூட பெருசா எடுத்துக்கல நீங்க எங்களுக்காக இரவும் பகலுமாக வேலை பார்த்துட்டு இருக்கீங்க. எனக்கு ஓட்டு போடணும்னு ஆசையா இருக்கு அனா எனக்கு 8 வயசு தான் ஆகுது.

எனக்கு 18 வயசு ஆகும் போது என் முதல் ஓட்டே உங்களுக்கு தான் அங்கிள். அப்பவும் உங்க ஆட்சி தான் இருக்கும். நல்லாட்சி தொடரட்டும் என்று ஜெய் பீம் படத்தில் நடித்த சிறுமி ஜோஷிகா மாயா கூறி உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles