சூர்யா மாபெரும் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் சில வருடங்களாக சூர்யா பெரிய வெற்றியை காணாமல் இருந்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படம் சூர்யாவின் கேரியரை மாற்றி அமைத்தது.
பைலட் கோபி நாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கொண்டு அந்தக் கதையை மிக அற்புதமாக உருவாக்கியிருந்தார்கள். சூரரைப்போற்று படம் பல விருதுகளை பெற்றாலும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தாலும் அந்தப் படம் தியேட்டரில் வெளியாகாது சூர்யா ரசிகர் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் சற்று வருத்தமே. அமேசான் OTT தளத்தில் வெளியான அந்த படத்தை தொடர்ந்து சூர்யா தனது தயாரிப்பில் வெளியான சில படங்களை அமேசான் நிறுவனத்திற்கு கொடுத்தார்.
சமீபத்தில் வெளியான ஜெய்பீம் என்ற திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மனதை கலங்க அடித்தது. ராசா கண்ணு என்பவர் எந்த ஒரு தவறும் செய்யாமல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை உலகத்திற்கே எடுத்துக்காட்டியது ஜெய் பீம் திரைப்படம். சூர்யா தயாரித்து நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது.
திடீரென்று இந்த படத்திற்கு வன்னியர் அமைப்பு மற்றும் பாமக கட்சி சார்பாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தது காரணம் அந்தப் படத்தில் சில காட்சிகளில் வன்னியர்களை புண்படுத்தும் படி காட்சிகள் அமைந்துள்ளதாகவும் சூர்யா அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரும் எதிர்ப்பு பல அமைப்புகளிடம் இருந்து தொடர்ந்து வந்தது.
தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததால் சூர்யாவிற்கு எந்த ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்று ஐந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் அவருடைய டி நகர் வீட்டிற்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர். இந்நிலையில் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கனலரசன் அவர்கள் 10 ஆயிரம் பேர் சூர்யா வீட்டின் முன் கூடினால் ஐந்து துப்பாக்கி இந்திய போலீசாரால் எப்படி சூர்யாவை காப்பாற்ற முடியும் என்று ஆவேசமாக பேசினார் தொடர்ந்து பல வன்னியர் அமைப்புகள் பெரும் எதிர்ப்பை தந்தது மட்டுமல்லாமல் சூர்யா ஜோதிகா இருவரும் மீதும் சிதம்பரத்தில் வழக்கும் பதிவு செய்துவிட்டார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி சூர்யா அவர்கள் சென்னையில் இல்லையாம் பல தரப்பிலிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக சூர்யா தற்பொழுது துபாய் சென்று உள்ளாராம்.
பலபேரின் ஆலோசனைப்படி சூர்யா இங்கு இருந்தால் தானே பிரச்சனை இன்னும் பெரிதாகி கொண்டே போகும் சில நாட்கள் துபாயில் இருக்கட்டும் என்று சூர்யாவை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சூர்யா எதற்காக துபாய் சென்றார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.