Sunday, May 19, 2024
-- Advertisement--

அஜித்தை அரசியலுக்கு அழைத்தது தப்பு தான்…!!! இப்போது தான் உணருகிறேன் பிரபல இயக்குனர் உருக்கம்..!!!!

அஜித் தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்பட்ட நடிகர். இவரது திரைப்படங்கள் வெளியாகும் போது தியேட்டர் திருவிழா போல இருக்கும் இவருடைய படத்தைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் அந்த அளவிற்கு கூடுவார்கள்.

அஜித் பொருத்தவரை ரிஸ்க்கான காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். ரசிகர்கள் மீது அன்பு வைத்திருக்கும் அஜித் தன்னுடைய சுயலாபத்திற்காக ரசிகர்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் அதனால் தன்னுடைய அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்தார் ரசிகர் மன்றங்களை கலைத்தும் அவரது ரசிகர்கள் அஜித் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றனர். அனைவரும் பிப்ரவரி 24ஆம் தேதி அஜித்தின் வலிமை திரைப்படத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் அஜித்தை அரசியலுக்கு அழைத்தது என்னுடைய தவறு தான் என்று கூறியுள்ளார்.

ஜெய் நடித்து வெளியாக இருக்கும் வீரபாண்டியபுரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுசீந்திரன் அவர்கள் மேடையில் பேசும் போது அஜித் மிகவும் நல்லவர் அவர் நல்லா இருக்கணும். நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அரசியலில் நிம்மதி இருக்காது நான் இப்போதுதான் உணர்கிறேன் அன்று அஜித்தை அரசியலுக்கு அழைத்தது தவறு என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அஜித் விஜய் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது இவர்களில் ரசிகர்களை தன் வசம் இழுக்க சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது அஜித்தை பொருத்தவரை எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்.

விஜய் சில வருடங்கள் கழித்து அரசியலுக்கு வருவேன் என்று அவரது கருத்தை வெளிப்படையாகக் கூறுகிறார் தற்போது விஜய் மக்கள் மன்றத்தினர் தேர்தலில் பங்கேற்று வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles