நடிகை ஸ்ருதிஹாசன் தனது உடலில் முருகனின் வேல் -ஐ டேட்டுவாக வரைந்து உள்ளார். தெலுங்கில் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களில் முறையே சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் நடித்தார்.
இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இப்போது “தி ஐ” என்ற ஆங்கில படத்தில் நடித்த வருகிறார். அப்பா கமலஹாசன் நாத்திகவாதியாக இருந்தாலும் சுருதி சிறுவயது முதல் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார்.
பக்தி மூலம் தமக்கு நிம்மதி கிடைப்பதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் தனது உடலில் முருகனின் வேலை டாட்டூவாக வரைந்து உள்ளார். அவர் கூறிய போது நான் எப்போதுமே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவள்.
முருகப்பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு. அந்த டாட்டு மூலம் தனது பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறேன். மேலும் பச்சை குத்துவது என்பது என்னுடைய வழக்கங்களில் ஒன்று.
தற்போது ஆன்மீகத்தின் தொடர்புடைய பச்சை குத்த வேண்டும் என்று விரும்பினேன் வேறு எதுவும் குறிப்பிட காரணம் இல்லை. ஆன்மீகம் என்பது என்னை அடக்கமாகவும் பாதுகாக்கவும் வைத்திருக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.