கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி தனது தனிப்பட்ட பிரைவேட் அந்தரங்க புகைப்படங்களை மூணு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக IPS அதிகாரி டி ரூபா அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார்.

IAS அதிகாரி ரோகினி சிந்தூரி அவர்களின் ரகசிய புகைப்படங்கள் நேற்று முன் தினம் திடீரென சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அந்த படங்களை 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அனுப்பினார் என்றும் அதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பினர் IPS அதிகாரி டி ரூபா அவர்கள்.

அத்துடன் ரோகினி சிந்தூரி மீது 19 கேள்விகளை எழுப்பி குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார் IPS அதிகாரி ரூபா.

கர்நாடகாவில் மாநில கைவினை பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக செயல்பட்டு வந்தார் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா. ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் டி ரூபா அவர்கள் ரோகிணி சிந்தூரி பிரைவேட் புகைப்படங்களை நாலு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பகிர்ந்துள்ளதாகவும் இது சட்டப்படி குற்றம் என்றும் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ரோகினி சிந்தூரி “மன நோய்க்கு சிகிச்சை என்பது தேவை பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அதுவும் மிகவும் ஆபத்தானது அவதூறு பரப்பும் வகையில் ரூபா செயல்படுகிறார்.

ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவருடைய கருத்தை தெரிவித்து இருந்தார் ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரிக்கும் இடையே பிரச்சனைகள் இருந்தது ஒரு பக்கம் இருந்தாலும் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த இந்த விஷயம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரோகிணி மற்றும் ரூபா இருவருமே கர்நாடகாவில் பெயர் பெற்ற அதிகாரிகள் என்றாலும் இவர்கள் இடையில் ஏற்கனவே சில பிரச்சினைகள் நடந்து வந்துள்ளது குறிப்பாக டி ரூபா அவர்கள் சசிகலா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டபோது சொகுசான வசதிகளை அமைத்துக் கொள்ள 2 கோடி கைமாறியதாக தகவலை வெளியிட்டு பெங்களூரு மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மிகவும் பிரபலமான இரண்டு அதிகாரிகள் கர்நாடகாவில் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டது அனைவர் கவனத்தையும் திருப்பி உள்ளது. தற்பொழுது கர்நாடக அரசு இருவருடைய பதவியையும் பறித்து இருவரையும் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளது.
ரோகினி அவர்களின் பதவியை வேறொருவருக்கும் ரூபா அவர்களின் பதவியே வேறவுக்கும் கொடுத்துள்ளது கர்நாடக அரசு.