உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் மூன்றாவது அலை தாக்க உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.ஆனால் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி சீனாவின் வுகான் பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பிய கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொடர் பாதித்த முதல் நபர் இவர்.
இந்நிலையில் கல்வி தொடர்பாக மாணவி டெல்லி செல்வதற்கு திட்டமிட்டார். இதற்காக அவர் தற்போது குறைவாக பரிசோதனை செய்தபோது அவருக்கு மீண்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.