இந்திய அரசாங்கம் இந்தியாவில் சிறப்பாக இயங்கி வரும் காவல் நிலையத்தின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் பத்து காவல் நிலையம் எது என்று தெரிவித்திருந்தது.
முதலிடத்தில் மணிப்பூர் காவல் நிலையம் உள்ளது அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்திலு மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காவல் நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மூன்றாவது இடத்தை அருணாச்சலப்பிரதேசம் காவல் நிலையம் பிடித்துள்ளது. நான்காவது இடத்தை சத்தீஸ்கர் காவல் நிலையம் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தை கோவா காவல் நிலையம் பிடித்துள்ளது. ஆறாவது இடத்தை அந்தமான் நிகோபார் தீவின் காவல் நிலையம் பிடித்துள்ளது. 10வது இடத்தில் தெலங்கானா காவல் நிலையம் இடம்பெற்றிருந்தது.
இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் பட்டியலில் சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல்நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது என்று தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தேசிய அளவில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திய சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.