தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்நிலையில் தமிழக அரசியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தனது கட்சியின் சார்பாக யார் எந்த தொகுதியில் நிற்கப் போகிறார்கள் என்ற விருப்ப மனு தாக்குதல் ஒரு பக்கம் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. அதிமுக – திமுக யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்கள் திமுகவிற்கு ஆதரவாக எந்தளவு இருக்கிறார்களோ அதுபோல அதிமுகவிற்கும் ஆதரவாக இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி போன்ற கட்சிகளும் இருப்பதால் அரசியலில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இருந்தாலும் திமுக அதிமுக யார் அதிக வாக்குகளைப் பெற போகிறார்கள் என்பதில் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.
பிரதமர் மோடி அவர்கள் திமுகவை பற்றி தவறாக பேசக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கோரிக்கை வைத்தது உடன் பாஜக கட்சியில் உள்ள ரவுடிகள் பட்டியலை வரிசையாக வாசித்துக் காட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்பொழுது தேர்தல் வேட்பாளர்களின் விருப்ப மனு கொடுத்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொகுதியில் அவரை எதிர்த்து யார் நிற்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்த்து திமுக சார்பில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி நிற்கப் விருப்பமனு ஒன்றை அண்ணாச்சி அண்ணா அறிவாலயத்தில் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இமான் அண்ணாச்சி சத்தமில்லாமல் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தற்பொழுது தமிழக முதல்வரின் தொகுதியான எடப்பாடியில் துணிச்சலாக நிற்பது இமான் அண்ணாச்சியின் தைரியத்தை காட்டியுள்ளது.
திமுக சார்பில் இமான் அண்ணாச்சி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்த்து வருகின்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் என்ற செய்தி சமூகவலைத்தளத்தில் இன்றைய ஹாட் டாபிக்.