Friday, May 17, 2024
-- Advertisement--

நன்றாக ஓய்வெடுங்கள் எங்களால் முடிந்த வரை உங்கள் கனவை நிறைவேற்ற உழைப்போம்..!!! கணவர் DR சேதுராமன் நினைவு தினத்தில் உறுதி அளித்த அவரது மனைவி உமா சேதுராமன்…!!!

சந்தானத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் மருத்துவருமான சேதுராமன் அவர்கள் இன்றுடன் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக இவரை சினிமாவில் அறிமுகபடுத்தினார் நகைச்சுவை நடிகர் சந்தானம். தனது நெருங்கிய நண்பரான இவரை எப்படியாவது சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்த சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி ஹீரோவாக்கி சந்தோஷப்பட்டார்.

அந்தப் படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அதனை தொடர்ந்து வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்து இருந்தார் சேதுராமன்.

ZI CLINIC என்று கிளினிக் ஒன்றை தொடங்கி தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் பிரச்சினைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். சேதுராமனின் லட்சிய கனவே ZI கிளினிக் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் விழிப்புணர்வு பதிவுகளை பதிவிட்டு வந்தார் அது மட்டுமல்லாமல் மக்களை ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரிக்கையும் கொடுத்திருந்தார்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் ஆரோக்கியத்திலும் தீவிர கவனம் செலுத்தி வந்த சேதுராமன் கடந்த 2020 மார்ச் 26 அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் சிறுவயதிலேயே டாக்டர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

santhanam in dr sethuraman funeral

நண்பன் சேதுராமனின் இறுதிச் சடங்கு வரை இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வந்தார் சந்தானம் அவருடைய மனைவி உமா சேதுராமன் தனது கணவரின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்து கதறி அழுதார். சேதுராமனுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்க அவர் இறக்கும் போது கூட அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். சேதுராமன் இறந்த சில மாதங்களிலேயே அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது தனது கணவர் தான் மீண்டும் பூமியில் பிறந்ததாக சந்தோஷப்பட்டார் அவரது மனைவி உமா சேதுராமன்.

இதையும் படிங்க : பிரபல நடிகை உறவு மற்றும் விவாகரத்து விவகாரம் அடுக்கடுக்காக பயில்வான் சொன்ன தகவல்..!!! ஆதாரம் இல்லாமல் பேசவில்லை பயில்வான் ரெங்கநாதன் பர பர பேட்டி.

தற்பொழுது உமா சேதுராமன் அவர்கள் தனது கணவர் ஆரம்பித்த ZI கிளினிக்கை நிர்வாகம் செய்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் தனது கணவரின் கனவை நிறைவேற்ற தீவிரமாக உழைத்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் தனது கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இன்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் 730 நாட்கள் ஆயிற்று…17520 மணிநேரம் ஆகிறது. உங்கள் உடல் சுயத்தை விட்டு நீங்கி 17520 மணிநேரம் ஆகிறது. இந்த 2 வருடங்களில் நான் வாழ்வின் அனைத்து வலிகளையும் கடந்துவிட்டேன் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு நொடியும் எங்கள் மனதிலும் இதயத்திலும் நீங்கள் இருந்ததை நான் அறிவேன். உங்களைப் பார்த்து நான் கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இதை நான் ஒரு கருப்பு நாளாகப் பார்க்கவில்லை.

இந்த நாள் நீங்கள் ஒரு புதிய உலகில் அடியெடுத்து வைத்த நாள். நீங்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் மகிழ்ச்சியைக் காணலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் அன்பைக் காணலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் அமைதியையும் வலிமையையும் காணலாம்.

நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எங்களால் முடிந்தவரை உங்கள் கனவுகளை அடைய முயற்சிப்போம். நன்றாக ஓய்வெடுங்கள் !!! என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன்.

இதையும் படிங்க : ராஜா ராணி சீரியல் பிரபலம் ஆலியா மானசாவிற்கு இரண்டாவது குழந்தை…!!! மருத்துவமனையிலிருந்து புகைப்படத்தை வெளியிட்ட ஆலியாவின் கணவர்..!!! .

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles