மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் ஹெலன். இந்தப் படம் வெற்றி பெற்று வசூல் நன்றாக செய்வதால் இந்த படத்தை தமிழில் விரைவில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். இந்த ஹெலன் படத்தில் பிரபலமானவர் தான் நடிகை அன்னா பென். இந்தக் கேரளப் பெண் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் உள்ள பிரபல மால் ஒன்றிற்கு ஷாப்பிங் செல்வதற்காக சென்றாராம் இவர். அப்போது அந்த மாலில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் அந்த நேரத்தில் இருவர் இவரைப் பின்தொடர்ந்து வந்தார்களாம். திடீரென்று இருவரில் ஒருவர் அவரது பின் பக்கத்தில் கை வைத்துவிட்டு சென்றாராம். உடனே கோபமடைந்த அந்த நடிகை தெரியாமல் அப்படி நடந்து இருக்குமோ என்று விட்டுவிட்டாராம் அதன்பின் யோசித்துப் பார்த்த பின்பு தான் தெரிந்தது அது திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்று.
அந்த இரண்டு இளைஞர்களும் இந்த நடிகை செல்லும் இடத்திற்கு பின் தொடர்ந்தார்களாம் நடிகையின் அம்மா வந்ததை பார்த்ததும் அவர்கள் விலகி விட்டார்களாம். எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இப்படி செய்வதை பார்க்கும்போது ஆத்திரமாக வருகிறது இன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த நடிகை.
தவறான எண்ணம் கொண்ட ஆண்கள் பெண்களின் பாதுகாப்பை பறித்துக் கொள்கிறார்கள் இதை நான் சொல்லவில்லை என்றாலும் இதே போல மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால் சொல்கிறேன் தவறு செய்தவர்கள் கன்னத்தில் ஓங்கி அறைய எனக்கு தைரியம் இல்லை என்றாலும் தைரியமுள்ள பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.