Sunday, May 19, 2024
-- Advertisement--

தமிழகம் : அரசுப் பள்ளிகளில் சேர கடந்த 2 நாட்களில் மட்டும் எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தெரியுமா…? அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்…

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நேற்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கையில் பெரும்பாலான பள்ளிகள் உள்ள இடங்களில் முழுமையாக நிரம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழிகல்வியை விட ஆங்கில வழிக்கல்வி அதிகம் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று ஆரம்பித்து விட்டதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் போன்றவற்றால் அரசு பணிகளில் சேர மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வேகமாக நிரம்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர கடந்த 2 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles