ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த 5 தடகள வீரர்களுக்கு தலா 5 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்பு பிரிவில் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் மற்றும் ரேவதி வீரமணி என மொத்தம் ஐந்து தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா 5 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
வீரர்களில் ஆரோக்கியராஜ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரருக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், சுபா வெங்கடேசன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவார்கள். ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 30 லட்சம் அரசின் ஊக்கத் தொகையினை கடந்த மாதம் 26ஆம் தெரியும் மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பவானி தேவி 5லட்சம் சிறப்பு ஊக்கத் தொகையினை கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.